பொதுவாக பலர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பலகாரம் செய்வது வழக்கம்.
அதில் கஷ்டமான பலகாரங்களை செய்வதைவிட சுலபமான அச்சு முறுக்கை எளிதில் செய்து சாப்பிடலாம்.
அந்தவகையில் தற்போது அச்சு முறுக்கை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு - 1 கப்
- மைதா - 1/4 கப்
- முட்டை - 4
- பொடித்த சர்க்கரை - 1/2 கப்
- தேங்காய்ப்பால் - 1 கப்
- வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை
அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும்.
அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீராக இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காயவைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை எண்ணெயில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில்மாவு அச்சில் ஒட்டிக்கொள்ளும்.
உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணெயில் மூழ்கும்படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணெயில் விழுந்து விடும்.
பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விடவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்து எடுக்கவும்.
அது சிவப்பாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும், ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம்.