தற்போது இருக்கும் உலகில் பலருக்கும் சாதரண மஞ்சள் என்றால் தெரியும், அதுவே கரும் மஞ்சள் என்றால் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும் கருமஞ்சளானது, வடநாடுகளில் பல ஆண்டுகளாக பண வருகைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த கரு மஞ்சளானது நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் விலை சற்று அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த கரு மஞ்சள் பணவரவு கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது நாம் எங்காவது வெளியில் பணவரவை எதிர்பார்த்து சென்றால், அப்போது இந்த கரு மஞ்சளை மஞ்சள் இழைக்கும், கல்லில் நன்றாக தேய்த்த், நெற்றியில் பூசிவிட்டு சென்றால் அந்த பணம் கிடைக்குமாம்.
அதுமட்டுமின்றி இந்த கரு மஞ்சள், ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக உள்ளது.
இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும்.
வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும்.
மேலும், இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.